108 ambulance service - aware camp 2011 |
24-02-2011 108 ஆம்புலன்ஸ் சேவை விளக்க முகாம் சிவகாசி, பிப். 22: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி என்.எஸ்.எஸ். சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்த விளக்க முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் கண்மணி தலைமை வகித்தார். மாணவர் ராமநாதன் வரவேற்றார். 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்து ஆம்புலன்ஸ் அலுவலர் வி.முருகன் பேசினார். மருத்துவ உதவி அலுவலர்கள் எஸ்.பால்பாண்டி, எஸ்.செண்பகமூர்த்தி, எஸ்.சீனிவாசன் ஆகியோர் முதலுதவி குறித்தும், விபத்து ஏற்பட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேசினர். இதற்கான ஏற்பாட்டினை திட்ட அலுவலர் ராஜகணபதி மற்றும் செந்தில்குமார் செய்திருந்தனர். |