Sivakasi Institute of Printing Technology - Annual Day Celebration 2011 |
28-02-2011 அச்சுத் தொழில்நுட்ப பாலிடெக்னிக் ஆண்டு விழா சிவகாசி, பிப். 27: சிவகாசி அச்சுத் தொழில்நுட்பப் பாலிடெக்னிக் 33-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் மாஃபா க.பாண்டியராஜன் பேசியதாவது (படம்): சாதனையாளயாக உருவாவேன் என நினைத்தால் சாதனையாளராக ஆகலாம். எனவே மாணவர்கள் என்னால் முடியும் என எண்ண வேண்டும். புதிய தொழில்நுட்ப ஆலோசனை இருந்தால், அதை செயல்படுத்தப் பல சாகச முதலீட்டாளர்கள் உள்ளனர். எப்போதும் நம்மால் முடியும் என எண்ண வேண்டும். தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறியுங்கள். படித்து முடித்து வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. புதிய தொழில் தொடங்க ஆர்வம் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சிக்கு அச்சக உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர் நடராஜ பிரபு தலைமை வகித்தார். தாளாளர் ஏ.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். முதல்வர் டி.ஜெயசீலன் ஆண்டறிக்கை வாசித்தார். தொழிலதிபர்கள் ஆர்.சொக்கலிங்க |