K.T. Rajendra Balaji ADMK Candidate - Election 2011 - Fly over bridge for Satchiapuram and Thiruthangal Railway Stations |
11-04-2011 சாட்சியாபுரம், திருத்தங்கல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை சிவகாசி ஏப். 10: சிவகாசி அ.தி.மு.க. வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அண்ணா நகர், நடராஜா காலனி, மணி நகர், தெய்வானை நகர், விஸ்வநத்தம் சாலை, பஸ் நிலையம், காந்தி சாலை ஆகிய பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: நான் வெற்றி பெற்றால் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சியில் மக்கள் பிரச்னைகளை ஆய்வு செய்து தீர்த்து வைப்பேன். சாட்சியாபுரம், திருத்தங்கல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவேன். திருத்தங்கல், சிவகாசி ரயில் நிலையங்களில் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகாரிகளிடம் முறையிடுவேன். ரயில் பயணிகள் நலன் ஆலோசனைக் குழுவினரிடம் ஆலோசனைசெய்து, ரயில் போக்குவரத்து மேம்படச் செய்வேன். திருத்தங்கல் ரயில் நிலையத்தில் நடைமேடை மேற்கூறை அமைக்க ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்துவேன். சிவகாசி ரயில் நிலையம் மற்றும் அரசு |