Sivakasi ADMK - Election 2011 |
11-04-2011 சிவகாசியில் அ.தி.மு.க. வாக்குச் சேகரிப்பு சிவகாசி, ஏப். 8: சிவகாசியில் கந்தபுரம் காலனி, ஆயில்மில் காலனி, சாரதா நகர், ஸ்டேட் பேங்க் காலனி, ஆசிரியர் காலனி, ரெங்கபாச்சியா நகர், செல்லப்பா நகர், பாரதி நகர், சிலோன் காலனி, சுக்கிரவார்பட்டி, அதிவீரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.டி.ராஜேந்திபாலாஜி வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: பல புறநகர் பகுதிகளில் சாலை, கழிவுநீர் வசதிகள் இல்லாமல் உள்ளன. நான் வெற்றி பெற்றால் இந்த வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளை ஆய்வு செய்து, உரிய அதிகாரிகளிடம் பேசி, தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்கப் பாடுபடுவேன். தகுதி உள்ளவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கச் செய்வேன். தொகுதி மக்கள் என்னை சந்திக்க தனியே ஒரு அலுவலகம் அமைப்பேன் என்றார். வேட்பாளருடன் சிவகாசி நகர அ.தி.மு.க. செயலாளர் அசன்பத்ரூதீன், ஒன்றியச் செ |