SIVAKASI WEATHER
Party symboled T-shirts - Election 2011

15-04-2011
கட்சி சின்னம் பொறித்த பனியன் வைத்திருந்ததாக இருவர் மீது வழக்கு

சிவகாசி, ஏப். 13: சிவகாசி அருகே புதன்கிழமை கட்சி சின்னம் பொறித்த பனியன் மற்றும் வாக்காளர்களுக்குக் கொடுக்க பணம் வைத்திருந்ததாக இருவர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிவகாசி அருகே நடுவப்பட்டியில் கனகராஜ் மற்றும் ராமமூர்த்தி குளிக்கச் செல்லும்போது, அதே ஊரைச் சேர்ந்த சண்முகராஜ் மற்றும் அழகுராஜ் ஆகிய இருவரும், உதயசூரியன் சின்னம் பொறித்த பனியன் மற்றும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைத்திருந்தார்களாம்.

இதை வைத்திருக்கக் கூடாது என கனகராஜ் கூறியதையடுத்து, தகராறு ஏற்பட்டதாம்.

பின்னர் இது குறித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில், போலீஸôர் சண்முகராஜ் மற்றும் அழகுராஜ் மீது வழக்குப் பதிவு செய்து பணம் ரூ. 2,000 மற்றும் 10 பனியன்களை பறிமுதல் செய்தனர்.

News & Events
top