SIVAKASI WEATHER
Election work in Sivakasi - 1006 staff for election duty

15-04-2011
சிவகாசி தொகுதி தேர்தல் பணியில் 1006 பணியாளர்கள்

சிவகாசி, ஏப். 12: சிவகாசி தொகுதியில் தேர்தல் பணியில் 1006 பேர் ஈடுபட உள்ளதாக கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சி. முனுசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏப்ரல் 13 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

சிவகாசி தொகுதியில் 210 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டது.

சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்கள் மண்டல தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன.

வாக்காளர்கள் ஏப்ரல் 13 ஆம் தேதி காலை எட்டு மணிக்கு வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சி. முனுசாமி தெரிவித்தார்.

News & Events
top