SIVAKASI WEATHER
Sivakasi Assembly constituency - Election 2011 - 49 O

18-04-2011
சிவகாசி தொகுதியில் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் 141 பேர்

சிவகாசி, ஏப். 16: சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என 141 பேர் 49-ஓ பயன்படுத்தியுள்ளனர் என கோட்டாட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சி.முனுசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் 49-ஓ பயன்படுத்தலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. சிவகாசி தொகுதியில் 141 பேர் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என 49-ஓ பயன்படுத்தியுள்ளனர்.

இதில் சிவகாசி நகராட்சிப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் 80-க்கும் மேற்பட்டோர் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என 49-ஓ பயன்படுத்தியுள்ளனர் எனத் தேர்தல் அதிகாரி முனுசாமி கூறினார்.

News & Events
top