Eye Donation Awareness Camp 2011 - Virudhunagar District stands in 1st position |
25-04-2011 கண் தான விழிப்புணர்வு: விருதுநகர் மாவட்டம் முதலிடம் சிவகாசி, ஏப். 23: கண் தான விழிப்புணர்வு முகாம் நடத்துவதிலும், கண் தானம் பெறுவதிலும் விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக முதலிடம் வகித்து வருகிறது என கண் தான மாவட்டத் தலைவர் ஜே.கணேஷ் கூறினார். இது குறித்து அவர் கூறியது: மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் கண் தானம் பெறும் தொண்டு நிறுவனங்களில் முதலிடம் வகிப்பது எது?, எந்த தொண்டு நிறுவனம் அதிகமாக கண் தான விழிப்புணர்வு முகாம் நடத்துகிறது? என இந்தியா முழுவதும் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து வருகிறது. 2010-ம் ஆண்டு எந்த தொண்டு நிறுவனம் அதிகமாகக் கண் தானம் பெற்றது?, அதிகமாகக் கண் தான விழிப்புணர்வு முகாம்களை நடத்தியது? என ஆய்வு செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெறுகிறது. இந்த மாவட்டத்தில் 2010-ம் ஆண்டு 496 ஜோடி கண்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. மேலும் ம |