Tenkasi - Tirunelveli broad guage project completed - 2011 |
03-05-2011 தென்காசி-திருநெல்வேலி அகல ரயில் பாதை பணி நிறைவு சிவகாசி மே 1: தென்காசி-திருநெல்வேலி அகல ரயில் பாதை பணி நிறைவு பெற்றுவிட்டதாக தென்னக ரயில்வே ரயில் பயணிகள் நலன் ஆலோசனைக் குழு உறுப்பினர் சிவகாசி எஸ்.பி.செல்வராஜனுக்கு தென்னக ரயில்வே நிர்வாகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது குறித்து ஏ.பி.செல்வராஜன் கூறியதாவது: தென்காசி-திருநெல்வேலி அகல ரயில் பாதை பணி இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிறைவு பெற்றுவிட்டது. இப்பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பணியில் குறைகள் ஏதும் உள்ளதா?, ரயில் எந்த அளவு வேகம் செல்ல முடியும்? என்பன உள்பட பல்வேறு ஆய்வுகள் செய்யப்படும். அதன் பிறகே ரயில் இயக்க முடிவு செய்யப்படும். இந்த ஆய்வு விரைவில் தொடங்கும். மேலும் செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதைப் பணி 2013-ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்Ī |