Safety Measures Training for Sivakasi Fireworks Workers |
06-06-2011 பட்டாசு ஆலைத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி சிவகாசி, ஜூன் 4: தாயில்பட்டியில் தொழிற்சாலை ஆய்வகத் துறையும், ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தாரும் இணைந்து பட்டாசுத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்புப் பயிற்சி முகாம் நடத்தினர். நிகழ்ச்சிக்கு சிவகாசி தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் வி.பெரியசாமி தலைமை வகித்தார். ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையின் மேலாளர் தங்கப்பாண்டி வரவேற்றார். விருதுநகர் தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் கே.சிதம்பரநாதன், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் செல்வசண்முகம், தொழிற்சாலைகள் ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், கதிர்வேலு, உதவி ஆய்வாளர்கள் சித்ரா, ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் |