Top scorers in 12th and 10th public exams are rewarded in Sivakasi |
25-06-2011 பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு சிவகாசி, ஜூன் 21: சிவகாசி பகுதியில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஆர்ட்ஸ் கிளப் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி (சிவகாசி), மாஃபா பாண்டியராஜன் (விருதுநகர்) ஆகியோர் மாணவ, மாணவிகளைப் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினர். மாணவர்களுடன் அவர்களது பெற்றோரும் மேடைக்கு அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து 26 ஆண்டுகளாக அரசு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்று வருகிறது. இதற்கு கல்வித் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களின் முழு ஈடுபாடு, மாணவர்களின் முனைப்பு ஆகியவையே காரணம் என்றார். மாஃபா பாண்டியராஜன் பேசுகையில், சிவகாசி-விருதுநகரை இணைத& |