Seminar in Ayya Nadar Janaki Ammal College Sivakasi |
25-06-2011 சிவகாசி கல்லூரியில் கருத்தரங்கம் சிவகாசி, ஜூன் 22: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி நூலகத் துறை சார்பில், தகவல் மற்றும் நூலக ஒருங்கிணைப்பு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் எஸ். பாஸ்கரன் தலைமை வகித்தார். நுண்ணுயிரியல் துறைத் தலைவர் டி. பிரபு வரவேற்றார். கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வி. அய்யன்கோடீஸ்வரன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கினைத் தொடக்கிவைத்தார். ஆமதாபாத் தகவல் மற்றும் நூலக ஒருங்கிணைப்பு மைய விஞ்ஞானி டி. அசோக்குமார்ராய் சிறப்புரையாற்றி பேசியதாவது: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் வர்த்தகம் உள்ளிட்ட தொழில்கள் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளன. புத்தகங்களும் ஏதேனும் ஒரு தகவலைத் தெரிவிக்கின்றன. மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வேண்டும் என்றார். இதில் 25 கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள், நூலகர்கள், பேராசிரியர்கள் |