SIVAKASI WEATHER
சிவகாசி அருகே ஆடு மேய்க்க ஒரு நாளைக்கு ரூ.500 சம்பளம்

29-06-2017
சிவகாசி அருகே ஆடு மேய்க்க ஒரு நாளைக்கு ரூ.500 சம்பளம்

விருதுநகர்: சிவகாசி அருகே ஆடு மேய்க்கும் தொழிலுக்கு ஆள் கிடைக்காததால் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். விவசாயத்தின் உப தொழிலாக ஆடு மேய்க்கும் தொழில் உள்ளது. ஆனால் தமிழகம் முழுவதும் தற்போது காணும் வரலாறு காணாத வறட்சியால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி மாவட்டமான விருதுநகரில் ஆடு வளர்க்கும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆடு வளர்க்க நாள் ஒன்றுக்கு ரூ.500 கொடுத்து, உணவு கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. அப்படியும் ஆள் கிடைக்காத நிலை உள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சிவகாசி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி அழகர்சாமி என்பவர் விசிட்டிங் கார்டு அடித்து விவசாயிகளிடம் கொடுத்துள்ளார். வறட்சியால் கால்நடைகள் வளர்க்கும் தொழில் ஆழிந்து வருவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.


News & Events
top