SIVAKASI WEATHER
சீசன் தொடங்கியதால் சிவகாசியில் தர்பூசணி விற்பனை விறு விறு

06-03-2018
கோடை துவங்கும் முன்பே தர்பூசணி விற்பனை சிவகாசியில் களைகட்ட துவங்கிவிட்டது. கோடை காலத்தில் விளையக்கூடிய தர்பூசணி 92 சதவீதம் நீர்ச்சத்துள்ள பழம். உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பழம். தற்போது, கோடை துவங்கும் முன்பே சிவகாசியில் வெயிலின் உக்கிரம் அதிகம் உணரப்படுகிறது. வெப்ப தாக்கத்தால் வெளியில் செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர். வெயில் தாக்கத்தில் இருந்து உடலை காப்பாற்றிக் கொள்ள, தர்பூசணியை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். தள்ளுவண்டி முதல் மார்க்கெட் வரை தர்பூசணி குவிந்து கிடக்கிறது. கிலோ ரூ. 10 முதல் 15 வரை விற்கப்படுகிறது.


News & Events
top