SIVAKASI WEATHER
சிவகாசியில் பொதுமக்கள் குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த நூதன ஏற்பாடு!

06-10-2018
சிவகாசியில் பொதுமக்கள் குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த நூதன ஏற்பாடு!

சிவகாசியில் பொதுமக்கள், குப்பைகளை தொட்டியின் உள்ளே கொட்டாமல் வெளியே கொட்டி வருவதை தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் புதுமையான ஏற்பாடு செய்துள்ளது.

சிவகாசி நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கிருந்து மட்டும் தினந்தோறும் 44 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதற்காக நகராட்சி முழுவதும் முக்கிய இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பொதுமக்கள் குப்பைகளை தொட்டியில் கொட்டாமல், தொட்டிகளின் வெளியே கொட்டும் நிலை தொடர்ந்து நிலவி வந்தது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசி, நோய்தொற்று பரவும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பொதுமக்கள், குப்பைகளை தொட்டியின் உள்ளே கொட்டாமல் வெளியே கொட்டி வருவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஒவ்வொரு குப்பை தொட்டியின் அருகிலும் பெரிய அளவில் வண்ணக்கோலம் வரையப்பட்டு உள்ளது.


News & Events
top