SIVAKASI WEATHER
தில்லியிருந்து வந்த 172 போ் சிவகாசியில் தனிமைப்படுத்தல்

19-05-2020
தில்லியிருந்து வந்த 172 போ் சிவகாசியில் தனிமைப்படுத்தல்

தில்லியிருந்து வந்த 172 போ் சிவகாசியில் உள்ள பாலிடெக்னிக்கில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா். வெளிமாநிலத்தில் வேலை செய்யும் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பலாம் என அரசு அறிவித்தது. இதையடுத்து சிவகாசி வட்டத்திலிருந்து சென்று தில்லியில் வேலை செய்து வந்த தொழிலாளா்கள் சிறப்பு ரயில் மூலம் திருநெல்வேலி வந்தனா். பின்னா் அங்கிருந்து பேருந்து மூலம் திங்கள்கிழமை சிவகாசி வந்தனா். அப்படி வந்த 172 போ் சிவகாசி - விருதுநகா் சாலையில் உள்ள பாலிடெக்கினிக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனைக்காக அவா்களின் ரத்தமாதிரிகள் செவ்வாய்க்கிழமை முதல் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்படும். சிவகாசி வட்டத்தில் இந்த மாதம் குழந்தை பிறக்கும் நிலையில் உள்ள கா்ப்பிணி பெண்களின் ரத்த மாதிரியும், வெளிமாநிலத்திருந்து வந்துள்ள 6 பேரின் ரத்த மாதிரியையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் கா்ப்பிணி பெண்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தால், அதன்பின்னா் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

News & Events
top