SIVAKASI WEATHER
குப்பை போட்ட இடத்தில் கோலம்.... சிவகாசி நகராட்சி அசத்தல்

08-08-2020
குப்பை போட்ட இடத்தில் கோலம்.... சிவகாசி நகராட்சி அசத்தல்

சிவகாசியில் நாரணாபுரம் செல்லும் வழியில் உள்ள, புதுத்தெரு பகுதியில் பல நாட்களாக குப்பைகளை ரோட்டிலேயே கொட்டி வந்தனர். அந்தப்பகுதியில் இருந்த பொத்தமரத்து ஊரணியும் இதனால் சாக்கடையாக மாறியது. நகராட்சி அதிகாரிகள் அந்தப்பகுதியை பல முறைகள் சுத்தப்படுத்தி, குப்பைகளை அள்ளி அகற்றினாலும் மீண்டும் மீண்டும் அந்தப்பகுதி மக்கள் குப்பைகளை அங்கேயே கொட்டி வந்தனர்.

இதனால் அந்தப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது. இதனை சரிசெய்வதற்காக நகராட்சி சுகதாரத்துறை அதிகாரிகள் அதிரடி முடிவெடுத்தனர். இன்று காலை தூய்மை பணியாளர்களை கொண்டு அந்த இடத்திலிருந்த குப்பைகளை முழுமையாக அள்ளி அகற்றினார்கள்.

மேலும் அந்தப்பகுதியில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று எச்சரிக்கை பலகையும் வைத்ததுடன், குப்பை கொட்டபட்ட இடத்தில் அழகிய கோலங்களையும் வரைந்து வைத்தனர். குப்பைமேடாக இருந்த இடம் இன்று வண்ணக் கோலங்களால் காட்சியளிப்பதை பார்த்த பொது மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.


News & Events
top