SIVAKASI WEATHER
சிவகாசி பஜார் வியாபாரிகளுக்கு தொற்று பரிசோதனை

08-08-2020
சிவகாசி பஜார் வியாபாரிகளுக்கு தொற்று பரிசோதனை

சிவகாசியில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் தினமும் பரிசோதனை முகாம்கள் நடத்தி வருகிறது. என்.ஆர்.கே.ஆர் வீதியில் உள்ள 135 கடைகள், வர்த்தக நிறுவனங்களில் வேலைபார்த்து வருகின்ற அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இதில் 123 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, வைரஸ் தொற்று பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் அதே பகுதியில் உள்ள 550 வீடுகளிலும் தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டது. நகராட்சி சார்பாக 2850 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. லேசான காய்ச்சல் தொந்தரவு இருந்த 115 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த வைரஸ் தொற்று பரிசோதனை முகாமில் சிவகாசி நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், அரிமா சங்க நிர்வாகிகள், பசுமை அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


News & Events
top