Electric goods looted - Theft in electric shop |
08-02-2011 பூட்டிய கடையில் மின்சாதன பொருள்கள் திருட்டு சிவகாசி, பிப். 7: சிவகாசி அருகே குமிழங்குளத்தில் பூட்டிய கடையில் மின்சாதனப் பொருள்கள் திருடுபோனது. சிவகாசி அருகே கிருஷ்ணம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (40) என்பவர் குமிழங்குளத்தில் மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை கடையைப் பூட்டிவிட்டுச் சென்றார். திங்கள்கிழமை காலை கடையை திறக்கச் சென்றபோது கதவில் உள்ள இரு பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்ததாம். கடையில் இருந்த பல மின்சாதனப் பொருள்களைக் காணவில்லையாம். இதன் மதிப்பு ரூபாய் பத்தாயிரம் எனக் கூறியுள்ளார். இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸรดர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |