Sornammal Education Trust |
08-02-2011 கல்வி ஊக்கத் தொகை வழங்க பள்ளி மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு சிவகாசி, பிப். 7: சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத் தொகை பெறத் தகுதியான பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்ய சிறப்புத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் திஷா கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் சுமார் 3,500 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 8 முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,200, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,500, கல்லூரி படிப்பிற்கு ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத் தொகை பெறத் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு கேடயம், பரிசுத் தொகை வழங்கப்படும். இத் |