Woman plays major role in creating best child
10-03-2011 சிறந்த குழந்தைகளை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மகத்தானது சிவகாசி, மார்ச் 8: சிறந்த குழந்தைகளை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மகத்தானது என சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் மாஃபா. க.பாண்டியராஜன் கூறினார். சிவகாசி காஸ்மாஸ் அரிமா சங்கம் சார்பில் திங்கள்கிழமை மகளிர் தின விழா நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியதாவது: கர்ப்பிணிப் பெண்கள், தங்களது குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என கற்பனை செய்ய வேண்டும். வீரமாக இருக்க வேண்டும். சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டும். ஒரு பெரிய தலைவராக உருவாக வேண்டும் என்பது போன்ற கற்பனைகளை அவர்கள் செய்ய வேண்டும். அப்படி செய்தால் கருவில் இருக்கும் குழந்தை, பிற்காலத்தில், கற்பனை செய்தபடி வாழ்வில் வெற்றி பெறும். குழந்தைகள் பிறந்த பின்னர் ஐந்து வயது வரை, நாம் செய்வதும், சொல்வதும் அவர்களது மனதில் பதியும். எனவே, பெண்கள் தங்களது குழந்தைகளிĪ |