Sri Kaliswari College - Seminar 2011


09-02-2011
கல்லூரியில் கருத்தரங்கம்

சிவகாசி, பிப். 8: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் நவீன தொழில்நுட்பத்தில் டாட் நெட்டின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வர் கண்மணி தலைமை வகித்தார். மாணவி ஜி.மகாகாளீஸ்வரி வரவேற்றார்.

தனியார் நிறுவன திட்ட மேலாளர் ப.முத்துவாணவாண்டி சிறப்புரையாற்றும்போது, டாட் நெட் மூலம் விண்டோஸ் பயன்பாடுகள், இணையதளம், அலைபேசி, தரவுதளம் ஆகிய பயன்பாடுகளை உருவாக்கலாம். ரோபோட்டிக் தொழில்நுட்பம், ப்ளூடூத் தொழில் நுட்பம், செக்யூரிட்டி சிஸ்டம் பயன்பாடுகளை டாட் நெட் மூலம் உபயோகிக்கலாம். இந்தியாவில் 63 சதம் நிறுவனங்களிலும், உலக அளவில் 53 சதவிகித நிறுவனங்களிலும் டாட் நெட்டை பயன்படுத்துகிறார்கள். நவீன தொழில்நுட்பத்தில் டாட் நெட்டின் பங்கு இன்றியமையாதது என்றார்.

வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டுத் துறை பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் ந

News & Events