SIVAKASI WEATHER
சிவகாசியில் கூடுதலாக ஒர&

24-02-2011
சிவகாசியில் கூடுதலாக ஒரு வங்கிக் கிளை

சிவகாசி, பிப். 23: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு என தனியே கூடுதலாக ஒரு கிளையை, சிவகாசியில் தொடங்க உள்ளதாக, அதன் நிர்வாக இயக்குநர் ஏ.கே. ஜெகநாதன் தெரிவித்தார்.

சிவகாசி வட்டம், திருத்தங்கலில் புதன்கிழமை அவ்வங்கியின் 229-வது கிளை திறப்பு விழாவுக்குத் தலைமைவகித்து, அவர் மேலும் பேசியதாவது:

சத்திரப்பட்டி உள்ளிட்ட இடங்களில், வங்கியின் புதிய கிளைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டில் வங்கியின் வர்த்தகம் ரூ. 23 ஆயிரம் கோடி. இது விரைவில் ரூ. 25 ஆயிரம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

பிறந்த குழந்தைகள் முதல் 75 வயது வரை உள்ள நபர்களுக்கு வைப்புத் தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் வங்கியில் உள்ளன.

சேவை தொடர்பான தங்களது குறைகளை நிர்வாகத்தினரிடம் வாடிக்கையாளர்கள் கூறலாம்.

மற்ற வங்கிகளைக் காட்டிலும் வைப்புத் தொகைக்கு அதிகபட்சமாக 10.25 சĪ

News & Events
top