SFR College for Women - 2011 Tamil Department |
06-04-2011 கல்லூரியில் இலக்கிய மன்ற விழா சிவகாசி, ஏப். 3: சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறையின் சார்பில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் த. ரத்தினமாலா தலைமை வகித்தார். ப.கனகா மாணவர் கருத்தரங்க மலர் குறித்து அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். குறுக்கெழுத்துப் போட்டி, கவிதை எழுதும் போட்டி, ஆய்வுக் கட்டுரை, இலக்கிய வினாடி-வினா போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. |