Eye donation awareness camp 2011 - Sri Kaliswari College |
06-04-2011 கண்தான விழிப்புணர்வு முகாம் சிவகாசி, ஏப். 3: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம், பட்டாசு நகர் அரிமா சங்கம், தொழிலாளர் கல்வி மையம் ஆகியவை இணைந்து கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு முகாமை நடத்தின. நிகழ்ச்சிக்கு தொழிலாளர் கல்வி மைய அதிகாரி செண்பகராஜன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் கே. ராஜகணபதி வரவேற்றார். கண் தான மாவட்டத் தலைவர் ஜெ.கணேஷ் கண்தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து பேசினார். கண்தானம் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. கண்தானம் குறித்த கேள்விகளுக்கு சரியான பதில் கூறிய மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பட்டாசு நகர் அரிமா சங்கத் தலைவர் ராஜேஷ், துணைத் தலைவர் ராமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார். |