SIVAKASI WEATHER
Power Shut down in Sivakasi - April 2011

06-04-2011
சிவகாசியில் மின்தடை

சிவகாசி, ஏப். 4: சிவகாசியில் ஏப்ரல் 6-ம் தேதி மின்தடை ஏற்படும் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

சிவகாசி துணை மின்நிலையங்களான பாரைப்பட்டி, சாட்சியாபுரம், வெம்பக்கோட்டை, திருத்தங்கல் ஆகியவற்றில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பாரைப்பட்டி, மீனம்பட்டி, அனுப்பன்குளம், விஸ்வநத்தம், பஸ் நிலையம், நாரணாபுரம் சாலை, காரனேசன் காலனி, நேரு சாலை, அண்ணா காலனி, சாட்சியாபுரம், போலீஸ் காலனி, ஆணையூர், விளாம்பட்டி, பூவநாதபுரம், விஸ்வநத்தம், செவல்பட்டி, அம்மையார்பட்டி, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, திருத்தங்கல், நாரணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

News & Events
top