Our vote is not for sale - Sri Kaliswari College students - Election 2011 |
07-04-2011 பணம் வாங்காமல் வாக்களிப்போம்: மாணவர்கள் உறுதி சிவகாசி, ஏப். 6: பணம் வாங்காமல் தேர்தலில் வாக்களிப்போம் என சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் தேர்தல்-விழிப்புணர்வு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி தமிழியல் துறை விரிவுரையாளர் கு.கருமுருகானந்தராஜன் பேசியதாவது: 18 வயது நிரம்பிய இந்தியர் ஒவ்வொருவரும் தேர்தலில் வாக்களிக்கலாம். வாக்களிப்பது மக்களின் கடமையாகும். நடுநிலையுடனும் துணிச்சலுடனும் வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என வெளியே சொல்லக் கூடாது. வாக்களிக்கச் செல்லும் போது, தேர்தல் அதிகாரியிடம் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமையாகும். எனவே, தேர்தலில் வாக்களர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார். இதில் கல்லூ |