SIVAKASI WEATHER
CA exam result announced

27-01-2011
சிவகாசி, ஜன. 25: அகில இந்திய சார்டர்ட் அக்கவுண்டன்ட் அமைப்பு 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய சி.ஏ. படிப்பிற்கான இறுதித் தேர்வில் சிவகாசி மாணவி டி.பிருந்தா இந்திய அளவில் 19-ம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார் என சிவகாசி தணிக்கை யாளர்கள் சங்கத் தலைர் செண்பகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிவகாசி தணிக்கையாளர்கள் சங்கம் சார்பில் சி.ஏ. தேர்வு எழுதுவதற்கு 2004-ம் ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேர்வு எழுதுவதற்கு தணிக்கையாளர்கள் பாடம் நடத்தியும், கணினி மூலமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 படிக்கும்போதே மாணவர்கள் இதற்குத் தயாராகிக் கொள்ளலாம். இதற்கு சிவகாசி தணிக்கையாளர்கள் சங்கம் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

News & Events
top