DMK - Election 2011 |
11-04-2011 தி.மு.க. ஆட்சியின் நலத்திட்டங்களை மக்கள் மறக்கவில்லை : தேசிய லீக் சிவகாசி, ஏப். 8: தி.மு.க. ஆட்சியின் நலத்திட்டங்களை மக்கள் மறக்கவில்லை என தேசிய லீக் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் நாகூர் வி.எஸ்.சாதிக் கூறினார். சிவகாசியில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த பத்து தினங்களாகப் பல இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறோம். அப்போது தி.மு.க. கூட்டணியின் ஆதரவு எழுச்சியைப் பார்க்கிறோம். கருத்துக் கணிப்புக்கள், கருத்துத் திணிப்புக்களாக உள்ளன. கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை மக்கள் மறக்கவில்லை. காங்கிரீட் வீடு கட்டும் திட்டம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினருக்கு 3.5 சதம் இடஒதுக்கீடு உள்ளது. இதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக கருணாநிதி கூறியுள்ளார். எனவே கருணாநிதி வெற்றி பெற்று 6-வது முறையாக முதல்வராவார். 2001, 2006 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல |