Sivakasi - Mariamman Kovil Panguni Pongal Festival 2011 |
15-04-2011 சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் விழா சிவகாசி, ஏப். 12: விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்து நாடார்களுக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினசரி காலை, மாலை அம்மன் வீதி உலா நடைபெற்றது. 5-ம் நாள் விழாவாக ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. பக்தர்கள் கோவில் முன்பு பொங்கலிட்டனர். 6-ம் நாளான திங்கள்கிழமை கயிறு குத்து விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் அக்கினிச் சட்டி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். |