Sivakasi Central Rotary Club - 2011 |
23-04-2011 சென்ட்ரல் ரோட்டரி சங்கக் கூட்டம் சிவகாசி, ஏப். 22: சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் சுரேஷ்தர்ஹர் தலைமை வகித்தார். இலக்கினை நோக்கி என்ற தலைப்பில் டி.காளிதான் பேசியதாவது: வாழ்விலும், தொழிலும் வெற்றிபெற பல சூத்திரங்கள் உள்ளன. தெளிவான திட்டம், தொடர் முயற்சி, குறிக்கோளை நோக்கி முன்னேறுதல் உள்ளிட்டவைகளை கடைப்பிடிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டில் நீங்கள் என்னவாக வேண்டும் என இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். 5 வருடத்தில் எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனைநோக்கி நாம் பயணத்தைத் தொடங்க வேண்டும். இப்பயணத்தில் இடையூறு ஏற்பட்டால் ஏன் எற்பட்டது என ஆய்வு செய்து அதைக் களைய வேண்டும். தோல்வி என்பது வெறும் இடறல்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒரு காரியத்தில் இறங்கினால் தோல்வி ஏற்படுமோ என எண்ணக்கூடாது. எப்போதும் நம் சிந்தனை வெற்றி என்ற சிந்தனையாகத்தான இரு |