Government Bus - 2011 |
23-04-2011 விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி சிவகாசி, ஏப். 21: விபத்து நஷ்டஈடு வழங்காததால் சிவகாசியில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அன்னலெட்சுமி (36). இவர் 1-1-2001ல் சாத்தூர் கோல்வார்பட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது சாத்தூரில் இருந்து சென்ற அரசு பஸ் இவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து விபத்து நஷ்டஈடு வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் மீது 2004-ம் ஆண்டு சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் அன்னலெட்சுமி மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் அன்னலெட்சுமிக்கு ரூ.75 ஆயிரம் நஷ்டஈடு வழங்குமாறு போக்குவரத்துக் கழகத்திற்கு 3-3-2008ல் உத்தரவிட்டது. இதை வழங்காததால், நிறைவேற்றுதல் மனுவை 4-10-2010ல் சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் அன்னலெட்சுமி தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சார்பு நீதிபதி எஸ்.சுமதி, வட்டியுடன் சேர்த்து ரூ.1 & |