Sivakasi Church |
30-04-2011 சிவகாசியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு : கோட்டாட்சியர் விசாரணை சிவகாசி, ஏப். 28: சிவகாசியில் பெந்தகோஸ்தே சபைக்கு தேவாலயம் கட்டுவதற்கு எதிப்பு தெரிவிக்கப்பட்டதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி, சர்ச்சைக்குரிய இடத்தை ஆய்வு செய்தார். சிவகாசி-சாத்தூர் சாலையில் சிவகாமிபுரம் காலனி உள்ளது. இக்காலனியின் பின்புறம் சிவகாசி பெந்தகோஸ்தே சபையினர் 6 ஏக்கர் நிலம் வாங்கி, தேவாலயம் கட்ட முடிவு செய்தனர். இந்த நிலம் விஸ்வநத்தம் ஊராட்சி எல்லைக்குள் உள்ளது. பெந்தகோஸ்தே சபையினர் ஏற்கெனவே திருத்தங்கல், சாட்சியாபும், சிவகாசி ரயில்வே பீடர் சாலை ஆகிய இடங்களில் தேவாலயம் கட்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். சிவகாமிபுரம் காலனியில் பெந்தகோஸ்தே சபையினர், வாக்குப் பதிவுக்கு முன்னர் கட்டடம் கட்டத் தொடங்கினர். அப்போது இப்பகுதியில் தேவாலயம் அமைந்தால், மதமாற்றம் நடைபெற வாய்ப்பு உண்டு என சிவகாமிபுரம் காலனி மக்கள் எதிர்ப்பு தெ |