Sivakasi Chithirai Festival Exhibition 2011 |
30-04-2011 சிவகாசியில் சித்திரைப் பொருள்காட்சி சிவகாசி, ஏப். 28: சிவகாசியில் சித்திரை பொருள்காட்சி புதன்கிழமை மாலை தொடங்கியது. சிவகாசி இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனையொட்டி, சிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பொருள்காட்சி தொடங்கியது. இந்த பொருள்காட்சியில் பலரக ராட்டினங்கள், சிறு குழந்தைகளைக் கவரும் அம்சங்கள், கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இந்த பொருள்காட்சி தொடக்க விழாவில், சிவகாசி இந்து நாடார்கள் உறவினமுறைத் தலைவர் எஸ்.எஸ்.ஏ. கதிரேசன், செயலாளர் டி. கதிரேசன், பள்ளித் தாளாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |