Theft in Sivakasi Jewellery Shop |
17-05-2011 நகைக் கடையில் 9 பவுன் திருட்டு சிவகாசி, மே 11: சிவகாசியில் உள்ள ஒரு நகைக் கடையில், நூதன முறையில் 9 பவுன் நகையைத் திருடிச் சென்ற நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர். சிவகாசி தெற்குரத வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில், கடந்த ஏப். 30-ம் தேதி இருவர் நகை வாங்க வந்தனராம். கடையில் பல நகைகளைப் பார்வையிட்ட அவர்கள், பிறகு வருகிறோம் எனக் கூறிச் சென்று விட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், மே 8-ம் தேதி கடையில் உள்ள நகை இருப்பை சரி பார்த்தபோது, அதில் 9 பவுன் எடையுள்ள 5 வளையல்கள் குறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடையில் உள்ள கண்காணிப்பு காமிராவில் கடந்த ஏப்.30ம் தேதி பதிவு செய்யப்பட்ட காட்சியைப் பார்த்தபோது, கடைக்கு வந்திருந்த இருவர் நகையைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இருவரின் புகைப்படத்தை பிரிண்ட் போட்டு, போலீஸôரிடம் அளித்து கடை மேலாளர் திருப்பதி (39) புகார் செய்தார். இதுதொடர்பாக, சிவகாசி நகர் போலீஸôர் வழக்குப்பதிவு ĩ |