Seminar in Sri Kaliswari College |
25-06-2011 காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கம் சிவகாசி, ஜூன் 23: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. தாளாளர் ஏ.பி. செல்வராஜன் தலைமை வகித்தார். முதல்வர் கண்மணி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் சுப்பிரமணியன் வரவேற்றார். காமராஜ் பொறியியல் கல்லூரி ஆலோசகர் ஜி.சண்முகம் தொடக்கவுரையாற்றினார். காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முத்துமாணிக்கம், அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் எம். லாரன்ஸ், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் ஆர். ராஜா கோவிந்தசாமி ஆகியோர் பேசினர். நாகராஜன் நன்றி கூறினார். |