Abdul Kalam in PSR Engineering College Sivakasi - 2011 |
29-06-2011 ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்தலாம் : அப்துல் கலாம் சிவகாசி, ஜூன் 27: ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை உயர்த்தலாம் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறினார். சிவகாசி அருகே உள்ள செவல்பட்டி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மாணவர்களுடன் கலந்துரையடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து அப்துல் கலாம் பேசியதாவது: அணுசக்தி மின்சாரம் என்பது நமக்குத் தேவையான ஒன்று. விமானங்களில் விபத்து ஏற்படுகிறது. அதனால் விமானங்களை நாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமா?. அணுஉலைகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடைபெறுகிறது. அதில் பாதுகாப்பு விவரங்கள் கிடைக்கும். எனவே அணுசக்தியை நாம் ஒதுக்கிவிடக் கூடாது. விவசாயத்தைப் பொறுத்தமட்டில் நாம் புதிய தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வீரிய ரக Ĩ |