Diabetes awareness programme in Sivakasi |
13-07-2011 சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் சிவகாசி, ஜூலை 9: சிவகாசி சர்க்கரை நோய் விழிப்புணர்வுக் கழகம் சார்பில், சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் செல்வராஜ் தலைமை வகித்தார். தொழிலதிபர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். டாக்டர் கணேசமூர்த்தி சிறப்புரையாற்றிப் பேசியதாவது: சர்க்கரை நோயைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவை இல்லை. இதற்கான சிகிச்சை முறைகள் மாறிக் கொண்டே இருக்கிறது. தற்போது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இன்சுலினை ஊசி மூலம் போட்டுக் கொள்வதே சிறந்தது என ஆய்வுகள் கூறுகின்றன. மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிடுவதால் பக்க விளைவுகள் இல்லை என்றார். ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை அண்ணாமலைத்தாய் உள்ளிட்டோர் பேசினர். இன்சுலினுடன் இனிமையான வாழ்க்கை என்ற தலைப்பிலான குறும்படம் திரையிடப்பட்டது. |