Inter Competition in Kamarajar Matriculation Hr.Sec. School Sivakasi |
26-07-2011 சிவகாசி பள்ளியில் தனித்திறன் போட்டி சிவகாசி, ஜூலை 23: சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் காமராஜ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கிடையே தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன. மகமை பண்டு தலைவர் எல்.பழனிச்சாமி தலைமை வகித்து, போட்டிகளைத் தொடக்கிவைத்தார். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பென்சில் ஓவியப் போட்டி, ஓரங்க நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சி.இ.நா.பெண்கள் மேல்நிலைப் பள்ளிதுணைத் தலைவர் விஜயமோகினி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்ரீகாளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் இயக்குநர் என்.அண்ணாமலைச்சாமி, மகமை பண்டின் முன்னாள் தலைவர் ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளித் தாளாளர் எம்.ராமமூர்த்தி வரவேற்றார். முதல்வர் சக்தி எழிலரசன் நன்றி கூறினார். |