SIVAKASI WEATHER
இன்று முதல் சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடக்கம்

22-01-2018
25 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது. நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கால் சிவகாசியில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அனைத்து பட்டாசு ஆலைகளும் முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடங்கின. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் இன்று முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் வழக்கம்போல உற்பத்தியைத் தொடங்கி உள்ளன.


News & Events
top