SIVAKASI WEATHER
சிவகாசி இளைஞர் சாதனை

04-06-2018
வாக்குச்சாவடிக்கு செல்லாமல் செல்போனை பயன்படுத்தி வாக்களிக்கும் செயலியை உருவாக்கி சிவகாசி இளைஞர் சாதனை

வாக்குச்சாவடிக்கு செல்லாமல் செல்போனை பயன்படுத்தி வாக்களிக்கும் வகையிலான ஒரு செயலியை சிவகாசியை சேர்ந்த இளம் பொறியியல் பட்டதாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். தேர்தல் காலங்களின் போது வேலை பளு உள்ளிட்ட பல காரணங்களால் பலருக்கு வாக்களிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இனி வீட்டில் இருந்தபடியே அவர்களை வாக்களிக்க முடியும் என்கிறார் சிவகாசியை சேர்ந்த குருசாமி என்ற இளைஞர்.

அவர் இந்த செயலியை பற்றி கூறுகையில்: தேர்தலில் 80-85% வாக்குப்பதிவு மட்டுமே பதிவாகிறது. அதை 100% மாற்ற இந்த செயலியை நான் கண்டுபிடித்துள்ளேன் என்றார். இந்த செயலியில் மொத்தம் மூன்று மாடல்கள் உள்ளது ஒன்று தேர்தல் ஆணையம் அடுத்தது வாக்காளர்கள் மற்றொன்று பார்வையாளர்கள். இதில் ஆதார் சேவை இணைக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் தங்களது கைரேகையை வைத்தால் போதும். தகுதியான வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். மேலும் தேர்தல் முடிவுகளையும் இந்த செயலி மூலம் அறியலாம் என்கிறார் குருசாமி. இந்த செயலி பற்றி தேர்தல் ஆணையத்திடம் தாம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


News & Events
top