SIVAKASI WEATHER
சிவகாசி அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பம் விநியோகம்

25-06-2018
சிவகாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள முதுகலை பாடப்பிரிவுகளுக்கு புதன்கிழமை (ஜூன் 20) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என அக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மா.காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2018-2019 ஆம் கல்வியாண்டுக்கான முதுகலை பாடப்பிரிவுகளான எம்.ஏ. தமிழ், எம்.ஏ.ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்.சி. கணிதம், எம்.எஸ்.சி. கணினி அறிவியல் ஆகியவை கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பாடப் பிரிவுகளில் சேர ஜூன் 20 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

News & Events
top