SIVAKASI WEATHER
ஆடி 18ம் பெருக்கு

03-08-2018
தீபாவளி பண்டிகைக்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில் வெளிமாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் பட்டாசு கொள்முதல் செய்வதற்காக ஆண்டுதோறும் ஆடி 18ம் பெருக்கன்று சிவகாசிக்கு வருவது வழக்கம். இந்தாண்டு தீபாவளி விற்பனைக்காக பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களின் பட்டாசு விற்பனை நிலையங்களில் பூஜைகள் செய்து விற்பனை துவக்கப்பட்டது. பெரும்பாலான பட்டாசுக்கடைகள் ஆண்டு முழுவதும் இயங்கும் உரிமம் பெற்றிருந்தாலும் தீபாவளி விற்பனைதான் அதிகமாக இருக்கும். எனவே, ஆடி 18ம் பெருக்கன்று புதுக்கணக்கு போட்டு விற்பனையைத் துவக்குவார்கள். சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் பட்டாசு விற்பனை ஷோரூம்கள் சுமார் 500க்கும் மேல் உள்ளன. இதில் பெரும்பாலான பட்டாசு விற்பனை கடைகளில் இன்று முதல் பட்டாசு விற்பனை ஆரம்பமாகி உள்ளது.


News & Events
top