Blossom 2011 - Ayya Nadar Janaki Ammal College |
07-02-2011 கல்லூரியில் தனித்திறன் போட்டி சிவகாசி, பிப். 5: சிவகாசியில் நடைபெற்ற தனித்திறன் போட்டியில் விருதுநகர் வி.வி.வி. மகளிர் கல்லூரி அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தாவரவியல் மற்றும் தாவர நுட்பவியல் துறை சார்பில், இளங்கலை அறிவியல் துறை மாணவ, மாணவிகளுக்கு பிளாசம் 2011 என்ற பெயரில் தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.இப்போட்டியில் காமராஜ் மற்றும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகங்ளைச் சேர்ந்த 14 கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பூக்கள் அலங்காரம், காய்கறிகளில் அலங்காரம், ரங்கோலி, கட்டுரைப் போட்டி, குழு நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் அதிக புள்ளிகளை விருதுநகர் வி.வி.வி. மகளிர் கல்லூரி அணி பெற்று அய்யநாடார் ஜானகி அம்மாள் சுழற்கோப்பையை பெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு முதல்வர் எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்தார். தாளாளர் சுபாஷ் சந்திரபோஸ் பரிசு வழ |