SIVAKASI WEATHER
பட்டாசு தொழிலாளர்கள் 100 இடங்களில் கஞ்சி தொட்டி திறக்க முடிவு

17-01-2019
பட்டாசு தொழிலாளர்கள் 100 இடங்களில் கஞ்சி தொட்டி திறக்க முடிவு

பட்டாசு தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி வரும் 19, 20-ம் தேதிகளில் கஞ்சிதொட்டி திறக்க பட்டாசு தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, விருதுநகர் மாவட்டத்தில், 100 இடங்களில் கஞ்சி தொட்டி திறப்பது என பட்டாசு தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளை சிஐடியு பட்டாசு தீப்பெட்டி தொழில் சங்கத்தினர் தொடங்கியுள்ளனர்.


News & Events
top