SIVAKASI WEATHER
சிவகாசி பட்டாசு ஆலைகள், மற்றும் தொழில்கள் சில கட்டுப்பாடுகளுடன், இயங்கும்

05-05-2020
சிவகாசி பட்டாசு ஆலைகள், மற்றும் தொழில்கள் சில கட்டுப்பாடுகளுடன், இயங்கும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய தொழிற்சாலை உரிமையாளர்கள், அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், ஆட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பட்டாசு ஆலைகள், அச்சகங்கள், அதனை சார்ந்த தொழில்களும், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் உள்ள மில், தறி தொழில்கள், அதனைச்சார்ந்த தொழில்கள், சிறு குறு தொழில்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் நாளை வழிகாட்டும் நெறிகள் அறிவிக்கப்படும். இது பற்றி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறும் போது, பட்டாசு ஆலைகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பட்டாசுத் தொழிலாளர்களை அழைத்து வரும் வாகனங்களில் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர வேண்டும், வாகனங்களுக்கு உரிய அனுமதி வாங்க வேண்டும், குறிப்பாக வேலை செய்யும் இடங்களில் சானிடைசர், கிருமி நாசினி கொண்டு தூய்மை பணிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பணியாளர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மாவட்டத்தின் அனைத்து தொழில்களும் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

News & Events
top