சிவகாசியில் நாளை பங்குனிப் பொங்கல் கொடியேற்றம் |
10-04-2021 சிவகாசியில் கடும் கட்டுப்பாடுகளுடன் நாளை பங்குனிப் பொங்கல் கொடியேற்றம் நடைபெற உள்ளது சிவகாசி மாரியம்மன் கோயிலில் நாளை கொடியேற்றத்துடன் பங்குனி பொங்கல் திருவிழா துவங்க உள்ளது. கொரோனா தொற்றினால் தமிழக அரசு இன்று முதல் கோயில் விழாக்களில் அதிக கூட்டம் சேர தடை விதித்துள்ளது. நாளை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்க இருப்பதால் கோயில் நிர்வாகஸ்தர்கள், சப் கலெக்டர் தினேஷ்குமாரை சந்தித்து அனுமதி கேட்டனர். கொரோனா தொற்றால் அரசு தடை விதித்ததை சுட்டிக் காட்டி கயறு குத்து, அக்னி சட்டி போன்றவற்றிற்கு தடை விதித்தார். சப் கலெக்டர் கூறியதாவது: கோயில் கொடியேற்ற நிகழ்ச்சிகளில் நிர்வாகஸ்தர்கள் குறைந்த அளவில் சமூக இடைவெளியினை கடை பிடித்து பங்கேற்கலாம். தேரோட்டம், கயறு குத்து, அக்னி சட்டி எடுத்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், என்றார். Sivakasi Panguni Pongal Kodiyetram 2021 |