SIVAKASI WEATHER
பட்டாசு ஆலைகளைத் திறக்கவும்

12-06-2021
பட்டாசு ஆலைகளைத் திறக்கவும்

பட்டாசு ஆலைகளைத் திறக்கவும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவைப் பட்டாசுத் தொழிலாளர்கள் வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ஆவது அலை தீவிரமாகப் பரவியதை அடுத்துக் கடந்த ஒரு மாத காலமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வந்ததையடுத்து தமிழக அரசு கடந்த 7ஆம் தேதி, ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது.

அதன்படி கடைகள் மற்றும் ஒருசில தொழிற்சாலைகள் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி அளித்தது. அதில் குறிப்பிட்டுள்ளபடி பஞ்சாலை, தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆகியவை 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம்.

இவற்றைக் குறிப்பிட்டுள்ள பட்டாசுத் தொழிலாளர்கள் இதே உத்தரவை விருதுநகர் மாவடத்தில் பட்டாசு தொழிலை நம்பியுள்ள 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

எனவே இதைக் கருத்தில் கொண்டு விருதுநகர் மக்களின் மூலதனமான தொழிலாக விளங்கும் பட்டாசு தொழிலையும் 50 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனப் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.6000 வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிஐசிடியு தொழிற்சங்கம் சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

Source: Samayam

News & Events
top