SIVAKASI WEATHER
4 கரோனா நோயாளிகள்

08-01-2022
4 கரோனா நோயாளிகள்

சிவகாசி அரசு மருத்துவமனையில் 4 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தலைமை மருத்துவா் டி. அய்யனாா் கூறினாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது; கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இல்லை என்ற நிலை இருந்து வந்தது. இந்நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஒரு நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தற்போது 4 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே கடந்த ஆண்டு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் 80 படுக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் கரோனா நோயாளிகள் வந்தாலும் சிகிச்சை அளிக்க தயாா்நிலையில் உள்ளோம் என்றாா்.

News & Events
top