SIVAKASI WEATHER
சிவராத்திரிக்கு தயாராகும் சிவகாசி

01-03-2022
சிவராத்திரிக்கு தயாராகும் சிவகாசி

சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் மகாசிவராத்திரி, குலதெய்வ கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்யப்படுவதை யொட்டி பூ மற்றும் பூஜை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு குல தெய்வ கோவில்களில் வழிபாடு நடைபெற உள்ளது. சிவன் கோயில்களில் இரவு முழுவதும் 4 கால பூஜை நடைபெறுவதை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து இரவு முழுவதும் தங்கியிருந்து சுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம். கடந்த 2 வருடங்களாககொரோனா தொற்று காரணமாக கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காததால் மகா சிவராத்திரி திருவிழா பக்தர்களின்று நடைபெற்றது. இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து சிவகாசி கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வர தயாராகி வருகின்றனர். சிவகாசி பகுதிகளிலுள்ள தங்களதுகுலதெய்வ கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வந்து சாமி தரிசனம் செய்வதற்கும் வருகின்றனர். பூஜைக்கு தேவையான பூ மற்றும் மாலை,தேங்காய்,வாழை பழம் மற்றும் பூஜை பொருட்களின் விலை சிவகாசியில் உயர்ந்து காணப்படுகிறது.


News & Events
top